Saturday, April 5, 2014

அல்-குர்ஆனின் அத்தாட்சிகள் ஸம் ஸம் தண்ணீர்( இதை விட ஒரு அதிசயம் இல்லை)

இதை பார்த்து ஒருவர் இஸ்லாத்தை தழுவலாம் இன்ஷா அல்லாஹ் பார்ப்பவர்
பகிர்த்து கொள்ள மறவாதீர்
இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன்
இptஸ்மாயீலையும்அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின்
கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த
போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை
ஏற்படுத்தினார்,அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை
நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.
கிணற்றின் அளவு
இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர்
இறைக்கப்பட்டுக்கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள்
அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20
லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில்
இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த
ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு,
அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில்
இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறதுஎன்பது
முதலாவது அற்புதமாகும்.
எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய்
விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது
இரண்டாவது அற்புதமாகும்.
எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள்
உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர்
நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான
காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல்
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.
மருந்துகளால் பாதுகாக்கப்படாததண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது
என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு
ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது
குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.
பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில்
தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை
தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள்
புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும்
இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே
அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான
நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது.
மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை.
நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால்
தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும்,
பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித
சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான
அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில்
சிறிதும் சந்தேகம் இல்லை ..

Dua for PROTECTION from Allah's ANGER, punishment, DEVILS and EVIL PEOPLE- ''I seek refuge in the Perfect Words of Allah from His anger and His punishment, from the evil of His slaves and from the taunts of devils and from their presence.'' A'oothu bikalimaatil-laahit-taammaati min ghadhabihi wa 'iqaabihi, wa sharri 'ibaadihi, wa min hamazaatish-shayaateeni wa 'an yahdhuroon Read this if you are afraid to go to sleep or feel lonely and depressed. You should read this dua if you see a bad dream. Abu Dawud 4/12. See also Al-Albani, Sahih At- Tirmidhi 3/171.

Dua for PROTECTION from Allah's ANGER, punishment, DEVILS and EVIL PEOPLE
-
''I seek refuge in the Perfect Words of Allah from His anger and His
punishment, from the evil of His slaves and from the taunts of devils
and from their presence.''
A'oothu bikalimaatil-laahit-taammaati min ghadhabihi wa 'iqaabihi, wa
sharri 'ibaadihi, wa min hamazaatish-shayaateeni wa 'an yahdhuroon
Read this if you are afraid to go to sleep or feel lonely and depressed.
You should read this dua if you see a bad dream.
Abu Dawud 4/12. See also Al-Albani, Sahih At- Tirmidhi 3/171.